
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் NLEAP அண்மையில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் (OLC) ஒத்துழைப்புடன் “அரசகரும மொழிகள் கொள்கை மற்றும் தொடர்பாடல் கருவிகள் சம்பந்தமான பயிற்றுநர்களுக்கான பயிற்சிக்களம்”
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) இலங்கை அரசகரும மொழிகள் கொள்கையின் (OLP) அமுல்படுத்தலை வலுப்படுத்துவதன் மூலமாகவும் இலங்கையின் கலாசாரப் பல்வகைமையினை இலங்கை ஆண்களும் பெண்களும் ஏற்றுக்கொள்ளச் செய்வதை அதிகரிப்பதன் மூலமாகவும் இலங்கையர்களான சிங்களம் மற்றும் தமிழ் பேசும் பெண்கள் மற்றும் ஆண்களின் வறுமையினைக் குறைத்து பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய மொழிகள் திட்டத்திலிருந்து (NLP) கட்டமைத்துச் செல்லவுள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன் பணியாற்றுவதன் மூலமும் சிவில் சமூக நிறுவனங்களுடன் பணியாற்றுவதன் மூலமும் செயற்றிட்டமானது: அரச சேவையாளர்களின் பால்நிலை பற்றிய கூருணர்வுமிக்க இரு மொழித் தொடர்பாடல் திறன்களை வலுப்படுத்தல், தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும், குறிப்பாக இருமொழி பேசும் சமுதாயங்களின் மத்தியிலும் அரச சேவைகளை இரண்டு அரசகரும மொழிகளிலும் (தமிழ் மற்றும் சிங்களம்) வழங்குவதற்கான பிரதான அமைச்சுக்களின் ஆற்றலை மேம்படுத்துதல்; மொழிப் பல்வகைமை மற்றும் மொழி உரிமைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வினை அதிகரித்தல்; அரசகரும மொழியில் தொடர்பாடுவதற்கான பிரசைகளின் ஆற்றலை அதிகரித்தல்.
சகல பிரசைகளினதும் மொழி உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான மற்றும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்துள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து அரசகரும மொழிக் கொள்கையின் அமுல்படுத்தலுக்கு உதவி வலுப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் இலக்கினைப் பூர்த்தி செய்வதற்காக கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படுவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள செயற்றிட்டமே NLEAP ஆகும். இந்த முகவர்களுள் மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம் (NILET), அரசகரும மொழிகள் திணைக்களம் (DOL) மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழு (OLC) ஆகியவை அடங்குகின்றன. தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களிற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மூலமாக NLEAP உதவி வழங்குகின்றது. இந்தக் செயற்றிட்டத்தினை முகாமைத்துவம் செய்து அமுல்படுத்துவதற்குப் பொறுப்பான கனேடிய நிறைவேற்று முகவராக (Canadian Executing Agency) குளோபல் எபயார்ஸ் கனடாவினால் (Global Affairs Canada) அலினியா இன்டர்நேஷனல் (Alinea International) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
![]() | ![]() | ![]() | ||
![]() |
கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு மற்றும் NLEAP ஆல் நிர்வகிக்கப்படும் தேசிய மொழி நிதியம் (NLF), மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழி கற்றலை மேம்படுத்துவதற்காக பல்வேறு இலங்கை சிவில் சமூக அமைப்புகளை ஆதரிக்கின்றது. இலங்கைத் தீவு முழுவதும், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பல்வகைப்பட்ட மக்களைச் சென்றடைவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எங்கள் NLF பங்காளிகள் இலங்கை முழுவதும் மொழி உரிமைகள் மற்றும் இரண்டாம் மொழி கற்றலை ஊக்குவிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வழிகளைப் பற்றி மேலும் படிக்கவும்.
எங்கள் NLF கூட்டாளர்களின் காணொளிகளைக் காணுங்கள்
அரச சேவைகளில் பாலின உணர்திறன்மிக்க இருமொழி வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான மைல்கல். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் பங்காளி நிறுவனங்களில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கக் கூட்டத்தினை பொது நிருவாக,…
அரச சேவைகள் மற்றும் தொடர்பாடலை மேம்படுத்துவதற்கென விருத்திசெய்துள்ள இரண்டு பயிற்சிக் கைநூல்களை மீளாய்வு செய்வதற்கான கரிசனையாளர் கூட்டங்களுக்கு தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அனுசரணை வழங்குகின்றது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் கடந்த 2022 செப்டம்பர் 15…
வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கான கரிசனையாளர் செயமர்வினை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) நடாத்துகின்றது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் வருடாந்த வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவதற்கென மொழித்துறைப் பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி…
மன்னிக்கவும், இந்த இடுகைபிரிட்டிஷ் ஆங்கிலம் இல் மட்டுமே கிடைக்கிறது.
மொழி என்பது அடையாளத்தின் முக்கியமானதொரு சின்னமாகும். அது மனித தொடர்பாடலில் இன்றியமையாத அம்சமாக இருந்து வருகின்றது. அவ்வகையில், ஒவ்வொரு நாடும், அரசாங்கமும் நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் மொழி உரிமைகளைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. இலங்கையில் பல்வேறு இனச்…
இலங்கையர்களிடையே மொழி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தோற்றுவித்துள்ள விருப்பு வெறுப்புக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் மொழிப் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. சமாதானத்துக்காக குரலெழுப்புவோர் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறிருப்பினும் சுதந்திர தின நிகழ்வுகள், அரச…
வருடாந்தம் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் நடாத்திய…