அலீனியா (Alinea) நிறுவனமும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமும் (NLEAP) இணைந்து நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இலக்காகக்கொண்டு உணவு நிவாரண நடவடிக்கைகளை தொடங்கி வைத்துள்ளது.

NLEAP நிறுவனம், தேசிய மொழிகள் நிதியத்துடன் (NLF) இணைந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது. “ கனடா அரசாங்கம் எமது பொறுப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எல்லா நேரங்களிலும் தொடர்ச்சியாக போசாக்கு நிறைந்த உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும்”. ஓய்வுநிலை. மதிப்பிற்குரிய. ஜஸ்டின் ட்ருடேவு, கனடா பிரதமர். இலங்கை 2022 ஆம் ஆண்டில் முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்தது மாத்திரமன்றி பொருட்களின்...

View

மொழி உரிமைகளுக்கும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்கும் (GEWE) இடையிலான இடைத்தொடர்பினை புரிந்துகொள்ளும் விதத்தில் அடிமட்டச் சமூகங்களை வலுவூட்டுதல்.

பெண்களின் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) மொழிக் கொத்தணிகளுக்கு GEWE பற்றிய செயலமர்வினை ஏற்பாடு செய்தது.   தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) விரைவான துலங்கல் நிதியைப் பெறுகின்ற WERC நிறுவனம், மத்திய மாகாணத்தின் மொழிக் கொத்தணிகளுக்கு அண்மையில் GEWE தொடர்பான செயலமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. மொழிக் கொத்தணிகள் என்பது அடிமட்டச் சமூகங்களுக்கு மத்தியில் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட சமூகத் தலைவர்களைக் கொண்ட...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக்கதைகள் : மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையம்

இன நல்லுறவின்மை எனும் இருளை அகற்றிட மொழி எனும் விளக்கை ஏற்றிடுவோம். தேசிய மொழிகள் நிதியத்தின் கூட்டாளி நிறுவனமான மனித உரிமைகள் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் இரண்டாம் மொழி வகுப்புக்களை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்தவர்களுக்கு அதன் மூன்றாவதும் இறுதியானதமான சான்றிதழ் வழங்கும் வைபத்தினை மிகவும் சிறப்பாக நடாத்தியது. அது மொழிகள் மற்றும் கலாச்சாரத்தின் வலிமையை உணர்த்தும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. இங்கு ஐம்பது (50) மணித்தியாலங்களைக் கொண்ட இரண்டாம் மொழிக் கற்கைப்...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக்கதை : அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) | இரண்டாம் மொழிக் கற்றலினூடாக வாழ்க்கையை மாற்றி சமூகங்களை மேம்படுத்துதல்.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் இரண்டாம் மொழிக் கற்றல் நிகழ்ச்சித்திட்டம் அஞ்சலதிபரின் தொழிலைப் பாதுகாத்துள்ளது.   சசினி அமந்தா 27 வயதுடைய சிங்கள யுவதி. தனது கல்வியைப் பூர்த்திசெய்துவிட்டு அரசாங்கத் தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவாவுடன் இருந்தாள். பல்வேறு முயற்சிகளின் பிறகு காலி, யக்கலமுல்லைப் பிரதேசித்தில் அமைந்துள்ள கொட்டாவ உபதபால் நிலையத்தில்  உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்தது. தனது உள்ளகப் பயிற்சியின் மூலம் அதிகபட்ச பயனைப் பெற்று சம்பந்தப்பட்ட...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக் கதை / சர்வோதய ஷான்தி சேனா சன்சதய / மொழிக் கல்வியினூடாக அரசகரும மொழிக் கொள்கையைப் பலப்படுத்துதல்.

இரண்டாம் மொழிக் கற்றலினூடாக சமாதானத்தைக் கட்டியெழுப்பவும் நல்லிணக்கத்திற்காகவும் எதிர்காலத் தலைமுறையை ஆயத்தப்படுத்துதல். தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான சர்வோதய ஷான்தி சேனா சன்சதய (ஷான்தி சேனா- சமாதானப் படையணி) என்பது சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் இளைஞர் அணியாகும். சர்வோதய மிகவும் பழமையான,பிரபல்யமான சிவில் சமூக அமைப்பாகும். அது சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணியில் கிட்டத்தட்ட 65 வருடங்களாக  அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. 1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இயக்கமான சர்வோதய ஷான்தி...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக் கதை |Palm Foundation | இரண்டாம் மொழிக் கற்றல் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வினூடாக சமூகத்தினைக் கட்டியெழுப்புதல்.

Palm Foundation இரண்டாம் மொழிக் கற்றல் மற்றும் வீதி நாடகங்களினூடாக சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றது. தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளரான PALM பவுன்டேஷன் தமிழ் மொழி வகுப்புக்களின் பூர்த்தியைக் கொண்டாடுவதற்காக 2022 மே மாதம் 26ஆம் திகதி வலப்பனை, கொஸ்கல்லை கிராமத்தில் விஷேட நிகழ்ச்சியொன்றை நடாத்தியது.  கொஸ்கல்லை கிராமத்தின் மொழி ஊக்குவிப்புக் குழுவினால் ஏற்பாடு செய்திருந்த குறித்த முழு நாள் நிகழ்வில் சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும்...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக் கதை | CEJ | மொழி உரிமைகளுக்கான பல்கலைக்கழக வீரர்களுடன் இணைந்து எமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல்.

தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையம் மொழி உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் புதியதொரு தலைமுறையின் உருவாக்கத்திற்கு துணைபுரிகின்றது. தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான சமத்துவம் மற்றும் நீதிக்கான மத்திய நிலையம், மொழி உரிமைகளுக்கான பல்கலைக்கழக வீரர்களாக தம்மைப் பதிவுசெய்து கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜுன் மாதம் 15 ஆம் திகதி மெய்நிகர் திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சியொன்றினை நடாத்தியது. அண்மையில் உருவாக்கப்பட்ட மொழி வீரர் சிறப்புக்...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | கிரிசாலிஸ் (Chrysalis) | மொழிக்கான உரிமை

இரு மொழி சேவை வழங்கலை வலுவூட்டும் விதத்தில் தேசிய மொழிக் கொள்கையை பயனுறுதியுடன் அமுல்படுத்துதல். சிலோன் தேயிலை உலகிலே மிகவும்  பிரபல்யமாகவும், இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும்  மிகவும் முக்கியமான தொழிற்துறையாக இருந்தாலும் இத்தொழிற்துறையின் முதுகெழும்பாக கருதப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னுமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான கிரிஸாலிஸ் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற, தொழில் புரிகின்ற நலிவடைந்த சமூகங்களின்,  விசேடமாக பெண்கள் மற்றும் இளைஞர்,...

View

NLF | SLCFD | அரச கரும மொழிகள் கொள்கையின் உதவியுடன் சைகை மொழித் தடைகளை வெற்றிகொள்ளல்.

தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் முன்மாதிரி நடவடிக்கை. தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனத்தின் நடவடிக்கைகள் உண்மையிலேயே செவிப்புலன் வலுவற்றோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்ற உள்ளுயிர்ப்பின் பிரதிபலிப்பாகும். அந்த வகையில், இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளனம் தேசிய மொழி நிதியக் குழுவுடன் இணைந்து செயற்பட தொடங்கிய காலம் முதல் அந்நிறுவனம் அரச கரும மொழிகள் கொள்கையை...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | PALM நிறுவனம் | ஓவியம் மற்றும் சுவரொட்டிகளினூடாக நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு மொழி உரிமைகளை ஊக்குவித்தல்.

கொவிட் தடுப்பு ஓவியம் மற்றும் சுவரொட்டிப் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு PALM நிறுவனம் சகவாழ்வுக் குழுக்களுடன் இணைந்து செயற்படுகின்றது. தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளி நிறுவனமான Palm நிறுவனம் மொழி உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் மொழிக் கற்றல் வாய்ப்புக்களை உருவாக்குவதனூடாக பெருந்தோட்ட மற்றும் கிராம சமூகங்களுக்கிடையில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. Palm நிறுவனம், “மனிதப் பெருந்தன்மைக்காக மொழி உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தொனிப்பொருளில் தனது பணிகளை...

View