அலீனியா (Alinea) நிறுவனமும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமும் (NLEAP) இணைந்து நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இலக்காகக்கொண்டு உணவு நிவாரண நடவடிக்கைகளை தொடங்கி வைத்துள்ளது.

NLEAP நிறுவனம், தேசிய மொழிகள் நிதியத்துடன் (NLF) இணைந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது. “ கனடா அரசாங்கம் எமது பொறுப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எல்லா நேரங்களிலும் தொடர்ச்சியாக போசாக்கு நிறைந்த உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும்”. ஓய்வுநிலை. மதிப்பிற்குரிய. ஜஸ்டின் ட்ருடேவு, கனடா பிரதமர். இலங்கை 2022 ஆம் ஆண்டில் முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்தது மாத்திரமன்றி பொருட்களின்...

View

மொழி உரிமைகளுக்கும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டலுக்கும் (GEWE) இடையிலான இடைத்தொடர்பினை புரிந்துகொள்ளும் விதத்தில் அடிமட்டச் சமூகங்களை வலுவூட்டுதல்.

பெண்களின் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) மொழிக் கொத்தணிகளுக்கு GEWE பற்றிய செயலமர்வினை ஏற்பாடு செய்தது.   தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) விரைவான துலங்கல் நிதியைப் பெறுகின்ற WERC நிறுவனம், மத்திய மாகாணத்தின் மொழிக் கொத்தணிகளுக்கு அண்மையில் GEWE தொடர்பான செயலமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. மொழிக் கொத்தணிகள் என்பது அடிமட்டச் சமூகங்களுக்கு மத்தியில் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட சமூகத் தலைவர்களைக் கொண்ட...

View

இலங்கையில் உரைபெயர்ப்புச் சேவைகளை தொழில்முறைப்படுத்துவதற்குக் கூட்டாக கருமமாற்றுதல்.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) பாடவிதான விருத்திக் குழுவின் ஆரம்பக் கூட்டத்தினை நடாத்தியது. இலங்கையில் அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறன்மிகு செயல்முறைப்படுத்தலுக்கு தொழில்முறை ரீதியில் தகுதியான, திறமையான உரைபெயர்ப்பாளர்கள் இருப்பது முக்கியமானது. தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து உரைபெயர்ப்பு டிப்ளோமாப் பாடநெறிக்கான பாடத்திட்டம் தொடர்பாகக் கலந்துரையடுவதற்கு பாடவிதான விருத்திக் குழுக் கூட்டத்தினை நடாத்தியது. குறித்த கூட்டம் இரு நாள் அமர்வாக...

View

மொழித்துறையின் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் ஈடுபடுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கல் (Networking) அங்குரார்ப்பணக் கூட்டம் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தலைமையில் இடம்பெற்றது.

அரச சேவைகளில் பாலின உணர்திறன்மிக்க இருமொழி வழங்கலை உறுதிப்படுத்துவதற்கான மைல்கல். தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் அதன் பங்காளி நிறுவனங்களில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் தொடர்பில் முனைப்புடன் செயற்படுகின்ற பிரதானிகளின் வலையமைப்பாக்கக் கூட்டத்தினை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் 2022 செப்டம்பர் 29 ஆம் திகதி தேசிய மொழிகள் பிரிவின் மாநாட்டு அறையில் நடாத்தியது....

View

மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரக கரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல்.

மொழி என்பது அடையாளத்தின் முக்கியமானதொரு சின்னமாகும். அது மனித தொடர்பாடலில் இன்றியமையாத அம்சமாக இருந்து வருகின்றது. அவ்வகையில், ஒவ்வொரு நாடும், அரசாங்கமும்  நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் மொழி உரிமைகளைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானது. இலங்கையில் பல்வேறு இனச் சமூகங்களின் அதிகாரம் மற்றும் வளங்களுக்கான போராட்டத்தில் மொழி உரிமைகள் குறிப்பிடத்தக்கதொரு வகிபாகத்தினை ஆற்றி வருகின்றன. 1956 ஆம் ஆண்டு தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு சிங்களத்தை தேசிய மற்றும் அரச...

View

சகலரையும் உட்படுத்துதல் மற்றும் உரிமை கொண்டிருப்பதில் மொழியின் வகிபாகம்

இலங்கையர்களிடையே மொழி தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தோற்றுவித்துள்ள விருப்பு வெறுப்புக்களுக்கு நீண்ட நெடிய வரலாறு இருந்தாலும் மொழிப் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை. சமாதானத்துக்காக குரலெழுப்புவோர் மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறிருப்பினும் சுதந்திர தின நிகழ்வுகள், அரச மற்றும் தனியார் வைபவங்களில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்படுகின்றது. அந்த வகையில், இலங்கை அடுத்த வருடம் கொண்டாடவுள்ள 75 ஆவது சுதந்திர தின நிகழ்வை மாற்றத்துக்கான...

View

அரசகரும மொழிகள் வாரம் – 2021 அகில இலங்கை பாடசாலைக் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்கள்

வருடாந்தம் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரையில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்துடன் இணைந்து 2021 ஆம் ஆண்டில் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கட்டுரை போட்டிக்காக பாடசாலை மாணவர்களினால் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய மொழிமூலங்களில் 1210 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இக்கட்டுரைப் போட்டியானது, கொரோனா...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிக் கதை |Palm Foundation | இரண்டாம் மொழிக் கற்றல் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வினூடாக சமூகத்தினைக் கட்டியெழுப்புதல்.

Palm Foundation இரண்டாம் மொழிக் கற்றல் மற்றும் வீதி நாடகங்களினூடாக சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கின்றது. தேசிய மொழிகள் நிதியத்தின் பங்காளரான PALM பவுன்டேஷன் தமிழ் மொழி வகுப்புக்களின் பூர்த்தியைக் கொண்டாடுவதற்காக 2022 மே மாதம் 26ஆம் திகதி வலப்பனை, கொஸ்கல்லை கிராமத்தில் விஷேட நிகழ்ச்சியொன்றை நடாத்தியது.  கொஸ்கல்லை கிராமத்தின் மொழி ஊக்குவிப்புக் குழுவினால் ஏற்பாடு செய்திருந்த குறித்த முழு நாள் நிகழ்வில் சிறுவர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும்...

View

அரச கரும மொழிகள் கொள்கைக்கான மூலோபாய வரைவுத்திட்டத்தை செயற்பாட்டு வடிவில் கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்து திட்டங்களைத் தயாரித்தல்.

மொழித்துறையில் முனைப்புடன் செயற்படும் பிரதானிகள் மூலோபாய வரைவுத்திட்டத்தின் அடிப்படையில் இடைக்கால – நீண்டகாலத் திட்டங்களைத் தயாரிப்பதற்கென சந்திக்கின்றனர். அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவு (அமைச்சு) இடைக்காலத் திட்டங்களைத் தயார்செய்வது தொடர்பாக கலந்துரையாடல்களை நடாத்தவும், அரச கரும மொழிகள் கொள்கையின் அமுல்படுத்துகை தொடர்பான மூலோபாய வரைவுத் திட்டத்துக்கான நீண்ட காலத் திட்டங்களின் ஆரம்பக் கட்டப் பணிகளைத் தீர்மானிப்பதற்குமென அரச கரும மொழிகள் திணைக்களம்...

View