செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

அரசகரும மொழிகள் வாரம் – 2021

பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் கட்டுரைப் போட்டியொன்றினை நடாத்துகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியாகும். மேலும் தகவலுக்கு படிக்கவும் - Essay Competition - Tamil...

View

ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கல்லூரியினால் நடத்தப்பட்ட மொழிபெயர்ப்பு கற்பித்தல் திட்டத்தின் (Training in Translation Pedagogy Program – TTPP) ஆரம்பப் பயிற்சிச் செயலமர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தது

மொழிபெயர்ப்புப் பட்டப்படிப்புத் திட்டங்களின் போதனை முறையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு கல்லூரியினால் நடத்தப்பட்ட மொழிபெயர்ப்பு கற்பித்தல் திட்ட (TTPP) பயிற்சியின் ஆரம்பச் செயலமர்வு 2021 மே 07ஆம் திகதி ஆரம்பமானது. இலங்கையில் மொழிபெயர்ப்புத் துறையில் பட்டப்படிப்பை வழங்கும் நான்கு பங்காளித்துவப் பல்கலைக்கழகங்களான களனி, யாழ்ப்பாணம், சபரகமுவ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்ளைச் சேர்ந்த பதினைந்து (15) கல்வியாளர்கள் 4 செயலமர்வுகளைக் கொண்ட 1ஆவது கட்டத்தை...

View

மொழித் திட்டமிடல் நடைமுறை பற்றி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOT) செயலமர்வு

மொழித் திட்டமிடல் நடைமுறை பற்றி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (TOT) செயலமர்வு அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மொழிப் பிரிவு, தமிழ் ஊடகப் பயிற்சியாளர்களுக்கென மொழித் திட்டமிடல் நடைமுறை பற்றிய மூன்று நாள் பயிற்சிக்களம் ஒன்றினை தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (NLEAP) ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை (யாழ்ப்பாணம், மன்னார். கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை...

View

தேசிய மொழிகள் நிதியத்தின் வெற்றிகள் | சர்வோதய சாந்தி சேனா சன்சதய | இளைஞர்களின் நிலைமாற்றல் சக்தியை மொழி உரிமைகளை நோக்கி ஈடுபடுத்துதல்.

சர்வோதய நிறுவனம் இளைஞர் மொழிக் கழகங்களை 5 செயற்றிட்ட மாவட்டங்களில் ஆரம்பிக்கின்றது.    “ இளைஞர்கள் பூகோள மாற்றம் மற்றும் புத்தாக்கத்தில் முன்னணியில் இருக்கும் விதத்தில் வலுவூட்டப்பட்டால், அவர்கள் அபிவிருத்திக்கும் சமாதானத்துக்குமான முக்கிய முகவர்களாக இருக்கலாம். மாறாக, அவர்கள் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்பட்டால் நாம் அனைவரும் நலிவடைந்திடுவோம். எனவே, சகல இளைஞர்களுக்கும் அவர்களின் சமூகங்களின் வாழ்வில் முழுமையான பங்கேற்புக்கு சகல சந்தர்ப்பங்களும் இருப்பதை உறுதிப்படுத்துவோம்.” – – கோபி அன்னான் –...

View

NLF வெற்றிகள் | சமாதான | ஒரு நேரத்தில் ஒரு வழிகாட்டிப் பலகையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்

சமாதான/ம் “தடைகளை வெற்றிகொள்ளல் – பாலங்களைக் கட்டியெழுப்புதல்” செயலமர்வு ஒரு மொழி வீரனுக்கு ஊக்கமளிக்கின்றது.  சிறுபான்மை சமூகங்களின் மொழி உரிமைகளைப் பாதுகாத்து நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக சமாதானம் என்ற அரச சார்பற்ற அமைப்பினால் “தடைகளை வெற்றிகொள்ளல் – பாலங்களைக் கட்டியெழுப்புதல்” என்ற செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  மொழிக் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முதன்மையான தடைகளுள் ஒன்றாக விழிப்புணர்வின்மையை அடையாளப்படுத்தியுள்ள இச்செயற்றிட்டம் அரச கரும மொழிகள் கொள்கை தொடர்பான விழிப்புணர்வினை மேம்படுத்துதவதற்கும் மொழி உரிமைகளை மதிக்கவுமென ...

View

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிப்பங்கு

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இணையவழிக் கருத்தரங்கு (Webinar) இலங்கையின் அரசகரும மொழிகள் கொள்கை தொடர்பாக ருஹுணு பல்கலைக்கழகம் நடத்திய இணையவழிக் கருத்தரங்கிற்கு (Webinar) அடித்தளமிட்டு, ஒருங்கிணைத்து, உதவிகளையும் வழங்க முடிந்தமை குறித்து தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் (NLEAP) பெருமகிழ்ச்சி அடைகின்றது. இக் கருத்தரங்கு, நுண்ணறிவான மற்றும் ஈடுபாடுமிக்க ஒரு செயலமர்வாக அமைந்தது. அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் (OLC) பணிப்பங்கு பற்றி உரைநிகழ்த்துவதற்காக...

View

அரசகரும மொழிகள் பற்றிய வருடாந்த அறிக்கையிடல்: கனேடிய அனுபவத்தின் பகிர்வு

வருடாந்த அறிக்கையிடலுக்கான கனேடிய அணுகுமுறை​ கனடாவுக்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழு, நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திற்கான அரசகரும மொழிகள் ஆணைக்குழு, ஒன்டாரியோ மாகாணத்திற்கான பிரெஞ்சு மொழிச் சேவைகள் ஆணைக்குழு என்பன 2019-2020 ஆண்டுக்கான தத்தமது வருடாந்த அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டன. அரசகரும மொழிகள் ஆணைக்குழு  – கனடா கனடாவிற்கான அதிகாரப்பூர்வ மொழிகளின் ஆணையாளரின் ஆண்டு அறிக்கை https://www.clo-ocol.gc.ca/sites/default/files/annual-report-2019-2020.pdf கனடாவுக்கான அரசகரும மொழிகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கைக்கான முகவுரை, 2019-2020 காலப்பகுதியில் அரசகரும...

View

NILET சிங்கள மற்றும் தமிழ் இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி

சிங்கள மற்றும் தமிழ் இரண்டாம் மொழி கற்பித்தலை மேம்படுத்தும் NILET முயற்சிக்கு NLEAP உதவுகின்றது   சிங்களம் மற்றும் தமிழை இரண்டாம் மொழியாகப் புகட்டும் ஆசிரியர்களுக்காக ஐந்து நாள் ஒன்லைன் பயிற்சிக் களம் ஒன்றை தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிலையம் (NILET)  அண்மையில் நடத்தியது. சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் போதிக்க வல்லவர்களாக இரண்டாம் மொழி ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட இப் பயிற்சிக்களத்தில் மத்திய...

View

NLF | SLCDF | அரச கரும மொழிகள் கொள்கை தொடர்பாக விழிப்பூட்டல் பயிற்சிகளை விருத்தி செய்வதற்காக சமூகத் தலைவர்களை பயிற்றுவிப்பதன் மூலம் சமூக ஒருங்கிணைப்பைப் பலப்படுத்துதல்.

அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம் (SLCDF) பயிற்றுநர் மொடியூல்கள் தொடர்பான பயிற்சிகளை 5 மாவட்டங்களில் நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்கின்றது. அரச கரும மொழிக் கொள்கையின் வினைத்திறன்மிக்க அமுல்படுத்தலுக்கு மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பலமான சிவில் சமூகக் கட்டமைப்பினை உருவாக்குவது மிகவும் முக்கியமானதென்பது தேசிய மொழி நிதியத்தின் பங்காளி நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தின் உறுதியான நம்பிக்கையாகும். அவ்வகையில் அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையம்...

View

தொழில்சார் கற்றல் சமூகத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம்

அரசகரும மொழிகளின் மொழிபெயர்ப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கான ஒரு மன்றம் இலங்கையின் பல்மொழித் தன்மை, பாலின அடிப்டையிலான தடைகள் என்பன சம்பந்தப்பட்ட குறிப்பான சவால்களில் கவனம் செலுத்துவதற்காக கல்விமான்கள், மாணவர்கள் மற்றும் தொழிற்றுறையினர் உள்ளடங்கிய ஒரு மன்றத்தை தொழில்சார் கற்றல் சமூகம் (PLC) ஏற்படுத்தியுள்ளது. NLEAP ஏற்பாட்டில் தொழில்சார் கற்றல் சமூகம் நடத்திய முதலாவது கூட்டத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் களனி, யாழ்ப்பாண, சபரகமுவ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவம்...

View